ADDED : நவ 19, 2012 11:11 AM

* உயிர் இல்லாத உடல் செத்ததாயிருப்பது போலவே, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததாகும்.
* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.
* மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதை விடக் கர்த்தரிடம் நம்பிக்கை வைத்திருப்பதே மேலானது.
* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் கடைபிடியுங்கள்.
* நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பதே பாவம்.
* நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான். தீயவன் தீய பொக்கிஷத்திலிருந்து தீயதைக் கொண்டு வருகிறான்.
* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை.
* நீதியின் கனியாவது, அமைதி உண்டாக்குபவர்களின் அமைதியிலேயே விதைக்கப்படுகிறது.
- பைபிள் பொன்மொழிகள்